அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேருக்கான பத்மம் பொறுத்தும் நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற பெரும் தேருக்கான மகா பத்மம் பொறுத்தும் நிகழ்வு
  இன்று நடைபெற்றது .


இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி  ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற   சிற்ப பெரும் தேருக்கான   மகா பத்மம் பொறுத்தும் நிகழ்வு இன்று காலை சுபவேளையில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன்  நடைபெற்றது .

யாழ்பாணம் ஸ்ரீ காளிகா சிற்பகலை ஸ்தபதி ரதகளா சூரி செல்லையா பாலச்சந்திராவினால் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்ப பெரும் தேருக்கு மகா பத்மம்  பொருத்தும் நிகழ்வு  ஆலய பிரதம குரு   தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக  சபை உறுப்பினர்கள் ,பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்.