(லியோன்)
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற பெரும் தேருக்கான மகா பத்மம் பொறுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது .
இலங்கையின் வரலாற்று
சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்ப பெரும் தேருக்கான மகா பத்மம் பொறுத்தும் நிகழ்வு இன்று காலை
சுபவேளையில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் நடைபெற்றது .
யாழ்பாணம் ஸ்ரீ
காளிகா சிற்பகலை ஸ்தபதி ரதகளா சூரி செல்லையா பாலச்சந்திராவினால் நிர்மாணிக்கப்படுகின்ற
சிற்ப பெரும் தேருக்கு மகா பத்மம்
பொருத்தும் நிகழ்வு ஆலய பிரதம குரு தலைமையில் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக சபை
உறுப்பினர்கள் ,பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்.