குருக்கள்மடம் கிருஷ்னர் ஆலய அலங்கார உற்சவம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்னர்; ஆலய அலங்கார உற்சவம் எதிர்வரும் 12.06.2018 செவ்வய்கிழமை ஆரம்பமாகவுள்ளது.அந்த வகையில் மட்டு மா நகரின் தென்பால் சகல வளங்களிலும் சிறந்து விளங்கும் குருக்கள்மடம் பதியிலே இந்தியாவின் காஷ்மீர் தேசத்தில் இருந்து வருகை தந்த வணக்கத்திற்குரிய சுவாமிஜீ ஶ்ரீலஶ்ரீ சோமே ஸ்வரானந்தரி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு அடியார்கள் அருள்பாலித்து வரும் ஶ்ரீ கிருஷ்ன பெருமானுக்கு அலங்கார திருவிழா நடாத்த திருவருள் பாலித்துள்ளதால்

நிகழும் மங்கல கரமான விளம்பி வருடம் வைகாசித் திங்கள் 29ம் நாள்12.06.2018 செவ்வய்கிழமை பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாகி
20.6.2018 புதன்கிழமை உதயம் அதனை தொடர்ந்து ஆனி உத்தர நட்சத்திரத்தில் சமுத்திர தீர்த்தோற்சவமும் நடைபெறும் பகல் திருப் பொன்னூஞ்சல்,நாராயண சேவையுடன்,இரவு ஆஞ்சனேயர் பூசையுடன் விழா இனிதே நிறைவு பெறும்.
இவ் திருவிழாவினை வேத சிவாகம குருமணி,கிரியா சர்வ சாகரர்,வித்தயா சிரோண்மணி,தேவிசாதகப்பிரியன் சிவஶ்ரீ சண்முக மயூரவதணக் குருக்கள் தலைமையில் இடம் பெறும் .

மேலும் தினமும் இரவு 7.45 மணிக்கு சமய சொற்பொழிவுகள் இடம் பெறும்.