மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மரநடுகை நிகழ்வு


 (லியோன்)

தேசிய மரநடுகை வாரத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில்  மரக்கன்றுகள் நடுகை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன


இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட ரீதியில்  அரச ,தனியார் அலுவலக உத்தியோகத்தர்களினால் மரநடுகை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  எச் .டி .கே .எஸ்  கபில ஜெயசேகரவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு  பொலிஸ் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில்  மரநடுகை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன .

இதன் கீழ் இன்று மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி நாகவத்த தலைமையில்  மரக்கன்றுகள்  நாட்டும் இடம்பெற்றன




.