(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாசாலையில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி நிர்வாக மற்றும் வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே .ஜசோதரன் தலைமையில் நடைபெற்றது .
PSDG வேலைத்திட்டத்தின் கீழ் 4௦ மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு இந்த மூன்று மாடி
கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது .
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்
பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ,கலந்துகொண்டு
கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் .
இதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்
இந்நிகழ்வில் ராமகிருஷ்ணன் மிஷன் தலைவர் சுவாமி வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி
பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் ,அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் , தியாகராஜா சரவணபவன் , , மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே
.பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி கே .அருள்பிரகாசம் , மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் .வியாலேந்திரன் . எஸ் .யோகேஸ்வரன் , ஞா .ஸ்ரீநேசன் ,அலிசாகிர் மௌலானா , பாடசாலை பிரதி அதிபர்
, ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்