துப்பாக்கி தவறுதலாக வெடித்து குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 07மணியளவில் கித்துள் பகுதியில் உள்ள காட்டு;பபகுதியில் வேட்டையாடச்சென்ற கித்துள் பகுதியை சேர்ந்த கருப்பசாமி இராமகிருஸ்ணன்(46வயது)என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேட்டைக்கு கொண்டுசென்ற கட்டுத்துவக்கு விழுந்து வெடித்தவேளையில் குறித்த நபர் படுகாயமடைந்ததாகவும் நீண்ட நேரத்திற்கு பின்னர் அவர் மீட்கப்பட்டு இரவு 11.00மணியளவில் கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்திருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கரடியானாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கரடியானறு பொலிஸார் தெரிவித்தனர்.