தரம் ஐந்து மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எச் எல் எம் .மீரா ஷாஹிப் ஏற்பாட்டில்
2018  ஆண்டு தரம்  ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத்தாள்கள்  இன்று மட்டக்களப்பு மத்திய வலய பாடசாலைகளுக்கு  வழங்கி  வைக்கப்பட்டது .


கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் 15வது வருடமாக வழங்கப்படுகின்ற இந்த வினாத்தாள்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வலைய பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன

இன்று மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம் சி எம் எ .சதார் தலைமையில் பாடசாலையில் நடைபெற்ற வினாத்தாள்கள் வழங்கும் இந்த நிகழ்வில் . மட்டக்களப்பு மத்திய வலைய கல்விப்பணிப்பாளர் எ எல் எம் ஜூனையிட் ,ஆரம்ப கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஆர் .பாஸ்கரன்  ,மத்திய வலைய பணிப்பாளர் ஹரிஹரன் , மத்திய வலய பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள்  கலந்துகொண்டனர்