(லியோன்)
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எச் எல் எம் .மீரா ஷாஹிப் ஏற்பாட்டில் 2018 ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத்தாள்கள் இன்று மட்டக்களப்பு மத்திய வலய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது .
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் 15வது வருடமாக வழங்கப்படுகின்ற இந்த வினாத்தாள்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வலைய பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டு
வருகின்றன
இன்று மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா
தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம் சி எம் எ .சதார் தலைமையில் பாடசாலையில் நடைபெற்ற
வினாத்தாள்கள் வழங்கும் இந்த நிகழ்வில் . மட்டக்களப்பு மத்திய வலைய
கல்விப்பணிப்பாளர் எ எல் எம் ஜூனையிட் ,ஆரம்ப கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஆர்
.பாஸ்கரன் ,மத்திய வலைய பணிப்பாளர்
ஹரிஹரன் , மத்திய வலய பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை
மாணவர்கள் கலந்துகொண்டனர்