(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப்
புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது.
தமிழ் பாரம்பரியத்தின் பழைமையை நினைவு படுத்தும் வகையில்
பாரம்பரிய
உணவுகள் தயாரிக்கப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டதுடன், கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது
.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கத்தின்
தலைவர் ,செயலாளர் , சமுர்த்தி
உத்தியோகத்தர்கள்,
கிராம
சேவை உத்தியோகத்தர்கள் ,
,கலாசார
அதிகார சபை உறுப்பினர்கள் ,சமுதாய சார்
சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் கிராம
மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .