மாங்காடு சமுர்த்தி வங்கியால் நடாத்தப்பட்ட விளம்பி புது வருட விளையாட்டு நிகழ்வு!

மாங்காடு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் எமது பாரம்பரியத்தை பேணுவோம் - சிக்கனத்திற்கு வழிகோருவோம் எனும் தொனிபோருளின் கீழ் இவ் வருடத்திற்கான தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டுவிழா - 2018 நிகழ்வு நேற்று 2018.04.22 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 02.30 மணிக்கு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.


வங்கியின் முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் என பல நடைபெற்றதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன.