மண்முனை மேற்கு பிரதேச சபையின் முதல் அமர்வு - அனைத்து உறுப்பினர்களும் ஒரு குடும்பமாய் செயற்பட அழைப்பு



(S.t)

கட்சி பேதங்களுக்கு அப்பால் மண்முனை மேற்கு பிரதேச சபையினை கட்டியெழப்புவதற்கு அனைவரும் ஒன்றாய் ஒரு குடும்பமாய் செயற்பட முன்வருமாறு தவிசாளர் செ.சண்முகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மண்முனை மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று(19/04/2018)காலை 10:00 மணிக்கு சபையின் தலைவர் செ.சண்முகராஜா தலைமையில் ஆரம்பமானது.

சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு இரண்டு நிமிடங்கள் நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என்று தவிசாளர் கூறியதற்கு இணங்க இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய சபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 1ம் வட்டாரத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட அரியரெத்தினம் மகேசராஜா அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.