மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.


மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

மாவட்ட சம்மேளன புனரமைப்பு  பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 22.04.2018) மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அனைத்து (14) பிரதேச இளைஞர்கழக சம்மேளனங்களினதும் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.

தலைவராக செல்வன் எஸ்.பயஸ் ராஜ், செயலாளராக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி கலாராணி, பொருளாளராக செல்வன் க.கேதீஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்திற்கு உதவிப்பணிப்பாளர் ஜனாப் ஹாலீத்தின் ஹமீர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேசங்களினதும் இளைஞர் சேவை அதிகாரிகள், தேசிய சம்மேளன பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.