மண்முனைப் பாலத்தினுடாக கொக்கட்டிச்சோலை பிரதான வீதி

மண்முனைத் தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பாலத்தினுடாக ஊடறுத்துச் செல்லும் கொக்கட்டிச்சோலை பிரதான வீதி அண்மைக்காலமாக  குன்றும் குழியுமாக காணப்படுவதால் இவ்வீதியால் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் இவ்வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பிரயாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Add caption