அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களின் திறந்த வெளி சிலுவைப்பாதை தியான நிகழ்வுகள்


(லியோன்)

இயேசு கிறிஸ்துவின் திரு பாடுகளை நினைவு கூறும் புனித மாதமாக பாஸ்கா நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் சிலுவை வழிபாடுகள் மூலம் வெளிபடுத்தி வருகின்றனர் .


இந்த சிலுவை பாதை தியான வழிபாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இடம்பெற்று வருகின்றன .

புனித சிலுவை பாதை தியான நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  கிறிஸ்தவ மன்ற மாணவ ஒன்றியத்தின்  விரிவுரையாளர் செல்வி .சி மோரின் ஒழுங்கமைப்பில்   திறந்த வெளி சிலுவைப்பாதை இன்று அரசினர் ஆசிரியர் கலாசாலை  மைதானத்தில் பயிலுனர் ஆசிரியர்களினால் நிகழ்த்தப்பட்டது .

அரசினர் ஆசிரியர் கலாசாலை  அதிபர் எஸ் .யோகராஜா தலைமையில் பயிலுனர் ஆசிரியர்களின் சிலுவை பாதை தியான  நிகழ்வுகள்  நடைபெற்றது .

இந்த திறந்த வெளி சிலுவைப்பாதை தியான நிகழ்வில் அருட்தந்தை எ தேவதாசன் கலந்துகொண்டு ஜெபவளிபாடுகளுடன் ஆரம்பித்து வைத்தார் .

இயேசு கிறிஸ்துவின் திரு பாடுகளை நினைவு கூறும் காட்சிகளை அரசினர் ஆசிரியர் கலாசாலை பயிலுனர் ஆசிரியர்களினால் காட்சிபடுத்தப்பட்டது .