மட்டு.-அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை வடகிழக்கில் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன்,ஞா.சிறிநேசன் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட 79 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 27 உறுப்பினர்களுமாக 106 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.