மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் யாழில் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விற்பனை செய்வதற்கு மிகவும் நூதனமான முறையில் கஞ்சாவை மறைத்து வைத்து சென்ற போதே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொண்டு சென்ற பொதியை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிடும் போது அதிலிருந்து 100 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யாழ் நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.