கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம்

மட்டக்களப்பு புதியநூற்றாண்டு லயன்ஸ் கழகத்தினரும் கோட்டைமுனை விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளை சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைறெவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறைக்கு உதவும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கில் நாளை காலை 8.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00மணி வரையில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்படவுள்ளத.

இந்த இரத்ததானமுகாமுக்கு அனைவரையும் வருகைதந்து தமது பங்களிப்பினை வழங்குமாறு அன்புடன் அழைத்துள்ளனர் ஏற்பாட்டுக்குழுவினர்.