மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவராக தெரிவு.

கடந்த சனிக்கிழமை (03.03.2018 )  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகத் தெரிவுக்கான பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இதன் போது மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவராக ரி.விமல்ராஷ் தெரிவு செய்யப்பட்டார்.

கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தின் தலைவரான செல்வன் ரி.விமல்ராஷ், இலங்கை தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின்  பிரதிநிதி, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொருளாளராகவும் (2016) பதவி வகித்தவர் , அத்தோடு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக மண்முனை மேற்கு  பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்   மண்முனை மேற்கு பிரதேச அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள இளைஞர் கழகங்களினதும் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.

பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாடு மற்றும் நெறிப்படுத்தலில்  நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழகங்களின் சம்மேளன தலைவர் ச.திவ்வியநாதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வ.லோகேஸ்வரன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா ஆகியோர் அதிதிகளாக  கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.