வெல்லாவெளியில் ஒருவர் வெட்டிக்கொலை

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இனந்தெரியாதவர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 39ஆம் கிராமமத்தில் வயல்வெளி ஊடாக வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.


சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.