புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி


 (லியோன்)

மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2018 ஆம் ஆண்டுக்கான  மெய்வல்லுனர் இல்ல  விளையாட்டுப்  போட்டி நிகழ்வுகள்  பாடசாலை  அதிபர்   எ விஜயகுமார் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது .


இந்நிகழ்வுக்கு  பிரதம   விருந்தினர்களாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர்  கே . அருள்பிரகாசம் ,உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி .லவக்குமார் ,ஓய்வுநிலை முன்னாள் பாடசாலை அதிபர் எஸ் சேகர் , ஓய்வுநிலை முன்னாள் பாடசாலை  பிரதி அதிபர் கே சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

ஆரம்ப  நிகழ்வாக  பாடசாலை  மாணவர்களால்  அதிதிகளுக்கு  மலர் மாலை அணிவித்து  அழைத்து  வரப்பட்டனர்,

அதனை  தொடர்ந்து  தேசிய கொடிமாகாண மோடி பாடசாலை  கொடி  மற்றும்   இல்லக்கொடிகள்  ஏற்றப்பட்டு  தேசிய  கீதம்      இசைக்கப்பட்டதுடன்     மாணவர்களின்  இல்ல  அணிவகுப்பு   இடம்பெற்றது.

நடைபெற்றவிளையாட்டு  நிகழ்வுகளில்  மாணவர்களின்  ஓட்டப்போட்டி ,       உடற்பயிற்சி ,  வினோத  உடை போட்டி,  மற்றும்  பழைய   மாணவர்கள் பெற்றோர்கள்ஆசிரியர்கள்  ஆகியோரின்  வினோத   விளையாட்டு            நிகழ்வுகளும்  இடம்பெற்றது,
பாடசாலையின்   இல்ல  விளையாட்டு  போட்டியின்  இறுதி  நிகழ்வாக            வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும்,  சான்றிதழ்களும்,  வெற்றி     கிண்ணங்களும்  வழங்கப்பட்டு விளையாட்டு  நிகழ்ச்சிகள்  சிறப்பாக  நிறைவு  பெற்றது.

இந்நிகல்வில் பாடசாலை  அபிவிருத்தி  குழு  உறுப்பினர்கள் , பாடசாலை  ஆசிரியர்கள் ,  மாணவர்கள் , பெற்றோர்கள்  ,பழைய மாணவர்கள் ,கிராம பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள்  என பலர் கலந்துகொண்டனர்.