மட்டக்களப்பில் ஓரே நேரத்தில் 15 சமாதான நீதிவான்கள் சத்தியப்பிரமாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 15பேர் அகில இலங்கை சமாதான நீதிவான்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் சிபாரிசுக்கு அமைவாக நீதி அமைச்சினால் இந்த சமாதான நீதிவான்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூகத்தில் உள்ள சிறந்த சமூக சேவையாளர்களை இனங்கண்டு அவர்களை கௌரவிக்கும் வகையில் இவ்வாறான சமாதான நீதவான்கள் நியமனங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட 15பேர்கள் இதன்போது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

யோகநாதன் ரஜனி,கோவிந்தபிள்ளை பாலகிருஸ்ணன்,சிதம்பரப்பிள்ளை செல்வராஜா,பிரேமராஜா பிரமிதன்.திருமதி சாமித்தம்பி கிருசா,தங்கராஜா இன்பராஜா,குணரெட்னம் தயாபரன்,நேசதுரை ஜெயகாந்தன்,குமாரசாமி கதாகர்,அமரசிங்கம் கருணாகரன்,ஆறுமுகம் பகீரதன்,சித்திரவேல் விஸ்ணுராஜா,மாசிலாமணி வன்னியசிங்கம்,பாக்கியராஜா கோபிநாதன்,அழகிப்போடி குலேந்திரராஜா ஆகியோர் அகில இலங்கை சமாதான நீதிவான்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபின்னர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.