முனைப்பினால் வாழ்வாதார உதவித்திட்டம் முன்னெடுப்பு.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விசேட தேவைக்குட்பட்ட கொக்கட்டிச்சேலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் குடும்பத்தலைவருக்கு மாவரைக்கும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

விசேட தேவைக்குட்பட்ட நிலையில் யுத்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு  தனது அன்றாட ஜீவனோபயத்தை முன்னெடுப்பதற்கு மிகுந்த சிரமங்களை எதிர் கொள்ளும் குடும்பமொன்றின் தேவை குறித்து  முனைப்பு நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை முனைப்பு நிறுவனத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து அதன் தலைவர் மா.சசிகுமார் அவர்களின் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முனைப்பு நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், முனைப்பு நிறுவனத்தின் சுவிஸ் கிளையின் நிருவாக உறுப்பினர் எஸ்.கேதீஸ் ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.