மட்டக்களப்பில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வரவேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்;டுவரும் நிலையில் நேற்று இரவு முதல் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை,இரண்டு நகரசபை,9 பிரதேசசபைகளுக்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று நள்ளிரவு நிறைவடைந்த நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் வாக்கெண்ணும் நிலையங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று மாலை முதல் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் திசவீரசிங்கம் சதுக்கம்,கூழாவடி,கல்லடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் நேற்று இரவு வெற்றி கொண்டாட்டங்களை நடாத்தினர்.

ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை ஆதரவாளர்களுடன் மேற்கொண்ட வேட்பாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் திசவீரசிங்கம் சதுக்கத்தில்(08வட்டாரம்) துரைசிங்கம் மதனும்,கூழாவடியில் (07ஆம்வட்டாரம்)பு.ரூபராஜ்,கல்லடியில் எஸ்.சரவணபவன்,உப்போடையில் சிறிஸ்கந்தராஜா,நாவற்குடா சூட்டி ஆகியோர் வெற்றிபெற்ற நிலையில் வெற்றிகொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.