நூறுகோடி மக்களின் எழுச்சி 2018 காண்பியக் கலைக் காட்சி


(லியோன்)

“ பெண்களுக்கும் பூமித்தாய்க்கும் எதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் “ வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைப் படைப்பாளர்களின் காண்பியக் கலைக் காட்சி மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதான வீதியின்  திறந்த வெளிக்காட்சியாக இன்று காலை
09.00 மணி  முதல் மாலை 06.00  மணி வரை நடைபெற்றது 


உலகிற்காக உலகெங்கும் நூறுகோடி மக்கள் எழுச்சி கொள்ளும் தினமாக பெப்ரவரி 14 ஆம் திகதி நினைவு கொள்ளப்படுகின்றது . இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த பூவுலகில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்க்கைக் காலத்தில் வன்முறைக்குட்படுத்தப் படுகின்றாள் .உலகின் சனத்தொகையாகிய அறுநூறு கோடியில் முன்னூறு கோடி பெண்களில் நூறுகோடி பெண்கள் வன்முறைக்குப்படுத்தப் படுகின்றார்கள் .

இது மிகவும் மோசமான நிலையாகும் , பெண்களுக்கும் ,அனைத்து மனிதர்களுக்கும் ,இயற்கைக்கும் எதிரான வன்முறைகள் இல்லாத உலகம் கொண்டாடப்பட வேண்டியது .

அத்தகைய மகிழ்வான உலகிற்காக உலகெங்கும் நூறுகோடி மக்கள் எழுச்சி கொள்ளும் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த நூறுகோடி மக்களின் எழுச்சி 2018  காண்பியக் கலைக் காட்சி  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது