தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் கட்சி –வி.பூபாலராஜா

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் இருதயபுரம் வட்டாரத்தில் போட்டியிடும் வி.”பாலராஜா தெரிவித்தார்.

இருதயபுரத்தில் தனது அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சிறந்த ஒழுக்கமுள்ளவர்களையும் சிறந்த சேவையாற்றக்கூடியவர்களையும் உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யும்போது உள்ளுராட்சிசபைகளை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கான சேவையினை வழங்கமுடியும்.
எனது தேர்தல் பரப்புரைகளுக்கு பொலித்தீன் பாவனைக்கு தடைவிதித்துள்ளேன்.எனது அலுவலகம் திறப்பு விழாவில் எந்தவித பொலித்தின்களும் பயன்படுத்தப்படாமலேயே பணிகளை மேற்கொண்டுள்ளேன்.

மட்டக்களப்பு மாநகரசபையினை சிறந்த மாநகரசபையாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த தேர்தலில் இருந்தே எனது பணியை தொடங்கியுள்ளேன்.

என்னைப்பொறுத்தவரையில் நான்; நீண்டகாலமாக பல அமைப்புகளில் இருந்து பல சமூக பொதுச்சேவைகளை மேற்கொண்டுவருகின்றேன்.நான் அரச உத்தியோகத்தராக இருந்தாலும்கூட மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்குடனேயே தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழர்களின் ஏகோபித்த கட்சி என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.தொடர்ச்சியாக போராட்டங்களை சந்தித்த நாங்கள் அரசியல் ரீதியான போராட்டத்திற்காகவே விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கினார்.

அந்த பணியை இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் சிறந்த முறையில் முன்கொண்டுசெல்கின்றார்.பல்வேறு தடங்களுக்கு மத்தியிலும் தளம்பல் இல்லாதவாறு கட்சியை முன்கொண்டுசெல்கின்றார்.

ஒரு சிலர் தங்களது சுயதேவைக்காக அரசியல் கருத்துகளை கூறி மக்களை குழப்பமுனைகின்றனர்.சம்பந்தன் ஐயா தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுத்தால் தமிழரசுக்கட்சி பலப்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலேயே இவ்வாறானவர்கள் வெளிக்கிளம்பி வருகின்றனர்.

பல இடங்களில் பணம் வழங்கப்பட்டு தேர்தலில் இறக்கப்பட்டுள்ளனர்.இதற்கு சில தமிழ் தலைமைகளும் விலைபோயுள்ளமை கவலைக்குரியது.மட்டக்களப்பு மாநகரசபைக்கு சிறந்த இளைஞர் கட்டமைப்பு இறக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் சிறந்த மாநகரசபையினை உருவாக்கும் எங்கள் பணி சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.