பிள்ளையான் மேல் நீதிமன்றில் ஆஜர்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைசர்  பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு  எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணைகளுக்காக இன்று மட்டக்களப்பு மேல் நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளர.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து  பேர்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்    வைக்கப்பட்டுள்ளனர் .

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று  புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து நாளை   4, ஆம் திகதி மற்றும் 8, 9 ஆம் திகதிகளில் நான்கு அமர்வுகளாக  மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிக்கின்றனர்.

இதன் முதல் நாள் அமர்வுக்காக இன்று .மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.