(நிரேஸ்)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினால் நேற்று (24.12.2017) ஞாயிற்றுக்கிழமை கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் ஆலயத்தின் நாட்காட்டிவெளியீடும் நிகழ்வு ஆலய முன்றலில் ஆலய பரிபாலன சபை தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியா பட்டிருப்பு பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.ஞானராஜா விசேட அதிதியாக நன்கொடையாளர்ளும் கலந்து கொண்டனர்.
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு கற்றல் வசதி குறைந்தமாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினூடாக நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக பல சமூகப்பணிகளையும் ஆற்றிவரும் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் பாரிய கல்விப்பணி ஒன்றாக இவ் உதவி வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளதுடன் இப்பணியை ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தவும் அதற்கு மேலாக எமது கிராமமக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்அதற்கென தனியான நிதியம் ஒன்றை ஆரம்பிக்கவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் படங்கள் மற்றும் ஆலய நிகழ்வுகள் போன்றன அச்சடிக்கப்பட்ட நாட்காட்டியும் வெளியீடப்பட்டது.