மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் (வீடியோ)

(லியோன்)

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 5, 6 .7  ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பான அரச அதிகாரிகளுடான  அவசர கலந்துரையாடல் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது..

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணத்தினால் கடல் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள  அமுக்கம் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி  மீனவர்கள் மற்றும்  கடல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் 5 ஆம் 6 ஆம் 7ஆம் திகதிகளில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .

அதேவேளை கரையோர பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு இது தொடர்பாக தகவல்கள் பிரதேச செயலக அதிகாரிகள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ,அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்குரிய  அதிகாரிகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தெரிவித்தார்.


மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அவசர கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைகள் உயர் மட்ட அதிகாரிகள் ,பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , முப்படையின் உயர் அதிகாரிகள் ,சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்