கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது ரெலோ. முடிவில்லாமல் முடிவுற்றது கூட்டமைப்பின் கூட்டம்

 (திலக்ஸ் ரெட்ணம்)
உள்ளூராட்சி சபை தேர்தலிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கிடையிலான மூன்றாவது முறையான இன்றைய(05) சந்திப்பும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனையடுத்து, வரும் உள்ளூராட்சிசபை தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலில்போட்டியிடுவதில்லை என்னும் முடிவு சற்றுமுன்னர் வவுனியாவில் நடைபெற்ற ரெலோவின் தலைமைத்துவக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின்  எதேச்சாதிகார போக்கால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  

                                                             
இன்றைய கூட்டத்தில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களின் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், அதில் விட்டுக்கொடுத்து செயற்பட தமிழரசுக்கட்சி தயாராக இருக்கவில்லை. “வெற்றிபெறும் வேட்பாளர்களை நாங்கள்தான் நிறுத்த முடியும்“ என மாவை சேனாதிராசா சொன்னதால் அங்கு சச்சரவான நிலையும் தோன்றியது.                             புளொட், ரெலோ இரண்டின் அவசரக்கலந்துரையாடல் இன்றிரவு நடக்கிறது. ரெலோ இன்றிரவே தனது நிலைப்பாட்டை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.