(லியோன்)
விதைகள் அமைப்பின் ஏற்பாட்டில் வரிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
வழங்கும் நிகழ்வு (23) மட்டக்களப்பில் நடைபெற்றது ,
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம
சேவை பிரிவுகளில் வறுமை கோட்டின் கீழ்
வாழ்கின்ற குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கல்வி
அபிவிருத்தியினை மேம்படுத்தும் முகமாக விதைகள் அமைப்பினால் பல அபிவிருத்தி
நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது .
இதன் கீழ் 2018 ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான கற்றல்
உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில்
நடைபெற்றது .
இந்நிகழ்வில் விதைகள் அமைப்பின் அங்கத்தவர்கள் , பாடசாலை மாணவர்கள்
,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்