விதைகள் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

விதைகள் அமைப்பின் ஏற்பாட்டில் வரிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (23)  மட்டக்களப்பில் நடைபெற்றது ,


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை பிரிவுகளில் வறுமை கோட்டின் கீழ்  வாழ்கின்ற குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கல்வி அபிவிருத்தியினை மேம்படுத்தும் முகமாக விதைகள் அமைப்பினால் பல அபிவிருத்தி நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது .

இதன் கீழ் 2018 ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .


இந்நிகழ்வில் விதைகள் அமைப்பின் அங்கத்தவர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்