(லியோன் )
மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவர்களின் சித்திரக் கைப்பணி கண்காட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்து கல்லூரி
மாணவர்களின் சித்திரக் கைப்பணி கண்காட்சி
கல்லூரி சித்திரப்பாட ஆசிரியர் நடராஜா இன்பமலர் ஒழுங்கமைப்பில் கல்லூரி அதிபர் எஸ்
டி முரளிதரன் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை
அணிவித்து அழைத்து வரப்பட்டனர் , தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள்
நடைபெற்றன .
இக் கண்காட்சி நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள்
கலந்துகொண்டதுடன் நிகழ்வில் இடம்பெற்ற ஆக்கங்கள் அனைத்தும் மாணவர்களின் ஆக்க திறன்களை
வெளிபடுத்தும் வகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது