சிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேக பட்டமளிப்பு

 (லியோன்)


மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய இந்து மதகுருவும் மாவட்ட செயலக சித்தி விநாயகர் ஆலய பிரதமகுருவுமான சிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேகம் (குரு பட்டமளிப்பு) யாழ் உரும்பிராய் சிவஞான பாஸ்கரன் பிரம்மஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.


யாழ் உரும்பிராயிலுள்ள சிவதர்மாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் சமய தீட்சைஇ நிர்வாண தீட்சைஇ ஆச்சாரியா அபிசேகமும் நடைபெற்று நவம்பர் 11ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியன்காடு ஆஞ்சனேயர் ஆலயத்தில் மாலை 3 மணிக்கு குரு வரவேற்பும் நடைபெறவுள்ளது.

சிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மா மாவட்ட செயலக சித்தி விநாயகர் ஆலயம், கள்ளியன்காடு ஆஞ்சனேயர் ஆலயம், அமிர்தகழி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், வலையிறவு மாணிக்க விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் பிரதமகுருவும் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம், கூழாவடி கிராம அபிவிருத்திச் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஆகியவற்றிலும் இணைந்து செயற்படுகிறார்.


நடராஜ குரு உத்தம குமாரன் சகுந்தலாதேவி ஆகியோரின் புதல்வனான சிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மா மாவட்ட செயலக சித்தி விநாயகர் ஆலய பிரதமகுருவாக 1993ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.