மகிழூர் முனை 110B சக்தி இளைஞர் கழகத்தினால் கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு.

(சசி துறையூர்) மகிழூர் முனை 110B சக்தி இளைஞர் கழகத்தினால் இம்முறை
கா.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு.

மகிழூர் பெரும் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் ஆன மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம், மட்/பட்/கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம்,  மற்றும் மட்/பட்/மகிழூர் முனை சக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து இம்முறை
கா.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி இலவச கல்விக் கருத்தரங்கு
மகிழூர்முனை 110B சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த 01.11.2017 தொடக்கம் 07.11.2017 இன்று செவ்வாய்க்கிழமை  வரை க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான மாபெரும் இலவச கல்விக்கருத்தரங்கு மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் தமிழ், கணிதம், வரலாறு, மற்றும்  விஞ்ஞான பாடங்களுக்கான கருத்தரங்கு இடம் பெற்றுள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும்  மகிழூர் கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் கரிசனை கொண்ட
இளைஞர்களின் அனுசரணையுடன் சக்தி இளைஞர்கழகத்தினால் இக் கல்வி கருத்தரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.