(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின்
ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அபிவிருத்தி குழு
உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கல்லூரி மாணவர்களின் ஒழுங்கமைப்பில் அதிபர் . கா .அருமைராசா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில்
நடைபெற்றது .
ஆரம்ப
நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளையும் ,ஆசிரியர்களையும் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது .
அதனை
தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம்
இசைக்கப்பட்டு ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது .
சமூகத்திற்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியா இருக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு கல்வி வலய (உடற்கல்வி ) உதவி கல்விப் பணிப்பாளர்
வி.லவக்குமார் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி
குழு
உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .