மட்டக்களப்பு புன்னைக்குடாவில் தாயும் மகனும் கொலை –தீபாவளியில் சோகம்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

புன்னக்குடாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே 27வயதுடைய தாயும் அவரது 11வயது மகனும் கழுத்துவிட்டபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் பீதாம்பரம் மதுசாந்தி 26 வயதெனவும் மதுசான் வயது 11 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் சம்பம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

வீட்டின் கூரையினை பிய்த்துக்கொண்டு உள் நுழைந்தவர்கள் இருவரையும் வெட்டிக்கொலைசெய்துள்ளதுடன் அங்கிருந்த நகைகளையும் கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகவும் ஏறாவூர்பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் கணவர் ஏழு வருடங்களுக்கு மேலாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில்புரிந்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர்பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

தீபாவளி தினத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தினால் அப்பகுதியோ சோகமயமானதாக காட்சியளிக்கின்றது.