முல்லைத்தீவு துணுக்காயில் முன்னெடுக்கப்பட்ட இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டம்.

(சசி துறையூர்)

முல்லைத்தீவு துணுக்காயில் முன்னெடுக்கப்பட்ட இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டம்.


முல்லைத்தீவு துணுக்காயில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துணுக்காய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், "நாம் போதையற்ற இளைஞர்கள் " எனும் தொனிப் பொருளுக்கமைய போதைப்பொருள் மற்றும் மதுபாவனையை குறைப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு பயன்மிக்கதாக நடைபெற்றதாக முல்லைத்தீவு மாாவட்ட இளைஞர் சேவை
 அதிகாரி மா.சசிகுமார் எமது செய்தி பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

துணுக்காய் பிரதேச செயலாக மண்டபத்தில் துணுக்காய் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஜே.சுகந்தன்  தலைமையில் இன்று செவ்வாய்கிழமை (31.10.2017)  இவ் நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்விற்கு அதிதிகளாக நிருவாக உத்தியோகஷ்தர் திருமதி பா. காந்தரூபன் , சி.சண்முகநாதன் கிராம சேவக நிருவாக உத்தியோகஷ்தர் , திருமதி கே.சரோஜா முல்லைத்தீவு மாவட்ட  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர், உட்பட பலர் கலந்து கொண்டதாகவும்,

மேலும் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் பெருமளவிலான இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டதாகவும் எமது செய்தி பிரிவுக்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மேலும் தகவல் தெரிவித்தார் .