ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நாளை


இந்த வருடத்திற்கான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 14 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.இந்த பரீட்சைக்காக மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் பங்குகொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம் காலை ஒன்பது மணிக்கு பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.கடந்த வருட தேர்தலில் தொலை தொடர்பு சாதன பயன்பாட்டால் பரீட்சைகளில் மோசடிகள் இடம் பெற்றமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த வருடம் பரீட்சை நிலையங்களுக்குள் தொலைதொடர்பு சாதணங்கள் கொண்டு செல்லப்படுவது முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பரிட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.