இறுதி தீர்மானத்தை நோக்கிய நிலையில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

தாம் தமக்கான இறுதி முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமது போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 102ஆவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுவருகின்றது.

தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி மேற்கொண்டுவரும் இந்த போராட்டத்தில் தொழில் வழங்கப்படும் என ஊடகங்கள் வாயிலாக கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் செய்திகளை வெளியிட்டுவரும் நிலையில் உறுதியான பதில்கள் வழங்கப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணசபை தமக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பான முறையான அறிவுறுத்தல்கள் எதுவும் வழங்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

எமது போராட்டத்திற்கான இறுதியான உத்தரவாதம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தாங்கள் தொடர்ந்து காந்திபூங்கா வந்து போராட்டத்தில் பங்கெடுப்பதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.