புதுவருடத்திற்கு முன்னர் தமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை

மத்திய மாகாண அரசாங்கங்கள் தம்மிடையே குற்றங்களைக்கூறிக்கொண்டிருக்காமல் வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 47வது நாளாகவும் இன்று சனிக்கிழமையும் தொடர்ந்துவருகின்றது.

இந்த நிலையில் மத்திய மாகாண அரசாங்கங்கள் தமக்கான நியமனங்களை வழங்குவதற்கு உறுதியான நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரதமரின் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று வருகைதந்து இரண்டு மாதகால அவகாசம் கோரியபோதிலும் இதுவரையில் அது தொடர்பிலான உறுதியான பதில்கள் எழுத்துமூலம் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்பாக தமது பிரச்சினைகளை மத்திய மாகாண அரசுகள் தீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.