யேசு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் புனித பெரிய வெள்ளி

(லியோன்)

யேசு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் புனித பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் (14) வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை நிகழ்வுகள்  நடைபெற்றன.




பெரிய வெள்ளி தினத்தன்று  மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள தேவாலயங்களில்  காலை திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள்  மிக பக்திபூர்வமாக நடைபெற்றன.


இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள  அனைத்து  கிறிஸ்த ஆலயங்களில்  திருச்சிலுவை பாதை நிகழ்வுகள்  நடைபெற்றது.


அனைத்து ஆலயங்களின் முன்பாக இருந்து ஆரம்பமான இந்த திருச்சிலுவைபாதை நிகழ்வு  ஆலயத்தை அண்டிய பிரதான வீதிகள் ஊடாக  திருச்சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெற்று ஆலயத்தினை வந்தடைந்தது


இந்த திருச்சிலுவை பாதை வழிபாடுகளில் பெருமளவான ஆலய பங்கு மக்கள் ,மட்டக்களப்பு நகரில் உள்ள  கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்