(லியோன்)
தமிழ் – சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியினால் சம்பிரதாய பூர்வமாக மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட அனைத்து வங்கிகளில் ஒரே நாளில் கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள
அனைத்து வாழ்வின் எழுச்சி சமுதாய
அடிப்படை வங்கிகளில் 2017ஆம் ஆண்டு தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வை முன்னிட்டு
கிராமிய பாரம்பரிய கலாசார விளையாட்டு
நிகழ்வுகள் இன்று பிற்பகல் நடைபெற்றது .
இதன் கீழ்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வலய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளான
இருதயபுரம் – இருதயபுரம் கிழக்கு ஆகிய
வங்கி முகாமையாளர்களின் தலைமையில் நடத்தப்பட்ட
சித்திரை புதுவருட பாரம்பரிய கலாச்சார விளையாட்டு
நிகழ்வுகள் நடைபெற்றது .
இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு
நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி
பெற்ற அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன
.
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி . என் . கிரிதராஜா ,
, வங்கி முகாமையாளர்களான
திருமதி .குமுதினி இருதயதாசன் ,
செல்வி .பாலசுந்தரம் சாமினி,
மற்றும் பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , வலய
வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி பயனாளிகள்
மற்றும் சிறுவர்கள் என பலர்
கலந்து சித்திரை
புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .