பெண்களின் ஆபாச படங்களை வைத்திருந்த இருவர் கல்லடியில் கைது

மட்டக்களப்பில்; ஆபாச படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் வைத்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களின் கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் விசாரணையின் பின்னர் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக மட்;டக்களப்பில் உள்ள பெண்கள் சிலரின் ஆபாசப்படங்கள் இணையத்தளங்களில் சிலரினால் தரவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.