மஞ்சந்தொடுவாயில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாயில் உள்ள வீட்டில் இன்று வியாழக்கிழமை காலை இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஞ்சந்தொடுவாய் பூட்சிட்டி வீதியை சேர்ந்த நிசாந்தன்(27வயது)இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு வீட்டின் சாமி அறையில் தூங்கச்சென்றவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸதலத்திற்கு சென்றுள்ள காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.