மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக பிரதேச செயலாளர் தவராஜா பதவியேற்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய வி.தவராஜா இன்று கடமையேற்றார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம் .உதயகுமார் பதிவியுயர்வுபெற்று இடமாற்றம் பெற்று சென்றுள்ளதை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய  ஆணையாளராக முன்னாள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் .

புதிய ஆணையாளரை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . ஆரம்ப நிகழ்வாக மாநகர வளாகத்தில் உள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது இதனை தொடர்ந்து மாநகர மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மாநகர சபை அலுவலக அனைத்து உத்தியோகத்தர்களும் ,ஊழியர்களும் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக  முன்னாள் கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் பணிப்பாளர் கே . குணநாதன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.