மட்டக்களப்பு உயர் தேசிய கல்வி நிறுவகத்தில் மரநடுகை நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

பதவியேற்பு தினத்தை முன்னிட்டு கல்வி நிலையங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் சிரமதானம் மற்றும் மர நடுகை நிகழ்வுகள் இன்று காலை முதல் நடாத்தப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரியில் மர நடுகை நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது ஐம்பது மரங்கள் நடப்பட்டதுடன் இந்த நிகழ்வில் மாணவர்கள்,விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.