(லியோன் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின்
கீழ் வாழும் வரிய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடலும் ஒளிவிழா நிகழ்வும் 04.01.2017 புதன்கிழமை மாலை
மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில்
பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் ஒழுங்கமைப்பில் நடாத்தப்படும் 11வது வருட
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் வரிய பாடசாலை
மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடலும் ஒளிவிழா நிகழ்வும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க (YMCA)
மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சுவீடன் நாட்டு தொழில் அதிபர்
ராஜேந்திரம் ஜெகப், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (HQ) தீகா வதுற ,
சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (IP) சிந்தக ஆகியோர் கலந்துகொண்டனர் .
இதன்போது மாணவ சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இவர்களுக்கான
பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்ப பாடசாலை
மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .