மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் புதுவருட பிரார்த்தனைகள்

பிறந்திருக்கும் 2017ஆம் ஆண்டு புதுவருடத்தினை வரவேற்கும் வகையில் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான புத்தாண்டு ஆராதனைகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றன.

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகையினால் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன் அடிகளார் உட்பட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டனர்.

இந்த திருப்பலி பூசையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பெருள்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தற்போதுள்ள சமாதான நிலை உறுதியான சமாதானமாக மாற்றமடைய மன்றாடுமாறு புத்தாண்டு வழிபாட்டின்போது ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை வேண்டுகோள் விடுத்தார்.