மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வு.

(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வு.


புதிய வருடத்தில் அரச கடமையை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காரியாலயத்தில் இன்று காலை 09.00மணிக்கு இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் ஜனாப் A.ஹமீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேசியகொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணமும் இடம் பெற்றது.

நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் நிஸ்கோ கூட்டுறவு சங்க முகாமையாளர், இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகஸ்தர்கள்  அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.