பேத்தாழையில் திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு.

(சசி துறையூர்) 

வாழைச்சேனை பேத்தாழை பொது மயானத்தில் திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வொன்று நேற்று 13.12.2016 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஸ்ணகுமார் மருதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இறந்த தமது உறவுகளுக்காக தீபம் ஏற்றி பிராத்தனை நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

இந் நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.