பிள்ளையானின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடு

இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்கி அதன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் இளைஞர்களை விடுதலைசெய்யக்கோரி வெல்லாவெளியில் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

போரதீவுப்பற்று பொது அமைப்புகள்,சிவநேசன் அமைப்பு என்பன இணைந்து இந்த நிகழ்வினை இன்று செவ்வாய்க்கிழமை நடாத்தியது.

மட்டக்களப்பு வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலையடையவேண்டி பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

இது தொடர்பான போராட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.