ஜக்கிய இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கதிரவனின் விழிப்புணர்வு வீதி நாடகம் கொத்தியாபுலையில்.

(சசி துறையூர்) ஜக்கிய இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்  கதிரவனின்  விழிப்புணர்வு வீதி நாடகம் கொத்தியாபுலையில்.

மண்முனை மேற்கு கொத்தியாபுலை கிராமத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் கொத்தியாபுலை ஜக்கிய இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளான் சர்வதேசம் நிறுவன அனுசரனையில் கதிரவன் கலைக் கழகத்தின் கலைஞர்களினால் இந்த விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இளைஞர் யுவதிகள் மற்றும் பொது மக்களிடையே, இளைஞர் யுவதிகள் தொழிற்பயிற்சி நெறியொன்றினை கற்றுக் கொள்வதன் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் "வாழத் தொழில்" எனும் தலைப்பில் இந்த வீதி நாடகம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.