மாமனிதரின் 11வது ஆண்டு நினைவு தின நிகழ்வு நாளை.

( சசி துறையூர்) மாமனிதரின் 11வது ஆண்டு நினைவு தின நிகழ்வு நாளை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர்
ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் நிகவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை பி.ப 02.00 மணி முதல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழரசுகட்சியின் இளைஞரனியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் கெளரவ  பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா கலந்து கொண்டு அன்னாரின் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.


மேலும் மட்டக்களப்பு ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய நவரெட்ண முரசொலிமாற குருக்கள், ஆயர் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டம் பேரருட்திரு அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோர் ஆசியுரை வழங்கவுள்ளனர்.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு கிளை உறுப்பினர் திருமதி சிந்துஜா திருமாறன் அவர்களினால் கவிதாஞ்சலி செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.